×

காய்கறி கடையில் பணம் திருட்டு

 

தேவதானப்பட்டி, பிப். 6: தேவதானப்பட்டியில் பாசித்ரகுமான் (28) என்பவர் காய்கறிக்கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக சென்றவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தீக்குளித்து இளைஞர் பலி பெரியகுளம், பிப்.6: பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்த நாகேந்திரபிரபு மகன் ஜெயபிரகாஷ் (21). இவர் நேற்று முன்தினம் வடுகபட்டி அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post காய்கறி கடையில் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Pasithrakuman ,Devdhanapatti ,Dinakaran ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை