×

ஆவடியில் பரபரப்பு காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி, பிப். 6: தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர் தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி ஜே பி எஸ்டேட் புதிய சேர்ந்தவித்தாகிரி(40) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிருஷ்ணகுமார்(23) ஆவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சிறுசேரி பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் படித்த ஆவடி திருமலைராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததார்.

சில தினங்களுக்கு முன் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதனால். மன உளைச்சலில் இருந்த இவர், நேற்று மதியம் அவரது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை இவரது தந்தை பணியை முடித்து விட்டு வந்து பார்த்தபோது கிருஷ்ணகுமார் தூக்கில் தொங்கியபடி இருந்ததால் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த ஆவடி போலீசார், இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post ஆவடியில் பரபரப்பு காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Avadi ,JP Estate ,Vidhagiri ,Aavadi ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...