×

செய்யாற்றில் வரும் 16ம் தேதி அண்ணாமலையார் தீர்த்தவாரி ஏற்பாடுகள் தீவிரம் ரதசப்தமியை முன்னிட்டு

கலசபாக்கம், பிப்.6: ரதசப்தமியை முன்னிட்டு கலசபாக்கம் செய்யாற்றில் வரும் 16ம் தேதி அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைெபற்று வருகிறது. கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி முன்னிட்டு வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை கோயிலில் இருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டு கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். முன்னதாக, துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை கிரிவலம் வந்து கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு கிராமம் அருகே செல்லும்போது கிராமத்தின் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிப்பர்.

இதனை தொடர்ந்து கலசபாக்கம் செய்யாற்றில் செல்லும் போது கலசபாக்கத்தில் இருந்து திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் செய்யாற்றில் நேருக்கு நேர் சங்கமிப்பர். இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து, செய்யாற்றில் மெகா பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருமா முடீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில், தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post செய்யாற்றில் வரும் 16ம் தேதி அண்ணாமலையார் தீர்த்தவாரி ஏற்பாடுகள் தீவிரம் ரதசப்தமியை முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Annamalaiyar ,Rathasaptami ,Kalasapakkam ,Annamalaiyar Theerthavari ,Annamalaiyar Theerthawari ,
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...