×

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

 

காரைக்கால்,பிப்.6: காரைக்கால் பெரிய பேட் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். கடைசி குழந்தையான நட்சத்திர மேரி (26). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு, பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நட்சத்திர மேரிக்கு திருமணம் செய்து வைக்க தந்தை ஆல்பர்ட் முடிவு செய்து, நட்சத்திரமேரியிடம் சம்மதம் கேட்டுள்ளார். அவரும் சம்மதம் என சொன்ன பிறகு மாப்பிள்ளை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நட்சத்திரமேரி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஆல்பர்ட் உனக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில், யாருடன் போனில் பேசுகிறாய் என கண்டித்துள்ளார்.

சிறிது நேரத்துக்கு பிறகு ஆல்பர்ட், ஆட்டுக்கொட்டைக்கு சென்ற பொழுது அங்கு, நட்சத்திர மேரி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உயிர் இருக்கும் என்ற நம்பிக்கையில், மகன் சந்தியாகு உடன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு நட்சத்திரமேரியை தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நட்சத்திர மேரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இது குறித்து ஆல்பர்ட் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Albert ,Big Bad Mariamman Temple Road ,Mary ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...