×

பைக் விபத்தில் கல்லூரி மாணவன் பலி

ராஜாக்கமங்கலம், பிப் 6: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆர்.எஸ். பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் கார்த்திக் (19). இவர் வெள்ளமோடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வரும் கார்த்திக்கின் நண்பர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் வெங்கடேஸ்வரன்(22). நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெங்கடேஸ்வரனும் கார்த்திக்கும் பைக்கில் கணபதிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கல்லுக்கட்டி அருகே வந்தபோது எதிரே கடியப்பட்டணம் தோமையார் தெருவை சேர்ந்த எட்வின் பெலிக்ஸ் என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் விபத்தில் கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Tenkasi District ,Sankarankoil ,R.S. Subbiah ,Karthik ,Patti ,Vellamodi ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...