- அரூர்
- முன்னாள் முதல்வர்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- கொங்கு பல்நோக்கு பயிற்சி மையம்
- தர்மபுரி மாவட்டம்
- அரூர் - ஊத்தங்கரை சாலை
- சேலம் சாலை
- எடப்பாடி
- தின மலர்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி மையத்தை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி, அவரை வரவேற்க அரூர்- ஊத்தங்கரை சாலை, சேலம் சாலை என பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அரூர் – சேலம் சாலையில் உள்ள ஏரிக்கடை, பைபாஸ் சாலை, ஊத்தங்கரை சாலை, அரூர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, கச்சேரிமேடு என 20க்கும் மேற்பட்ட இடங்களில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைத்திருந்த பேனர்களை மர்ம நபர்கள் பிளேடால் அறுத்து கிழித்திருந்தனர். இதையடுத்து கோஷ்டி மோதலில் பேனர்கள் கிழிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post எடப்பாடி பேனர்கள் கிழிப்பு appeared first on Dinakaran.