×

விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

சென்னை: விஜயகாந்த் உருவத்தை கையில் பிரேமலதா பச்சை குத்திக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருகிறது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையிலும் அவரது நினைவிடத்திற்கு தினமும் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தேமுதிக அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அஞ்சலி செலுத்துபவர்கள் அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் மறைந்தாலும், அவரை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக பொதுச்செயலாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா தன் வலது கையில் விஜயகாந்த் உருவத்தை பச்சைக் குத்தியுள்ளார். விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா கையில் பச்சைக் குத்தியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுக்கு கீழ் பலரும் பல்வேறு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

The post விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Vijayakanth ,Chennai ,DMD ,Chennai Coimbatore… ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...