×

பள்ளிக் கல்வித்துறையில் 4 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் பணியாற்றும் 4 பேர் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் அமுதவல்லி- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (பாடத்திட்டம்) ஆனந்தி-ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் (பயிற்சி) ஜெயக்குமார்- மதுரை மாவட்ட கள்ளர் சீரமைப்பு இணைய இயக்குநராகவும், மதுரை மாவட்டம் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் ஸ்ரீதேவி- சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக (பாடத்திட்டம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இணை இயக்குநர் அமுதவல்லி பொது நூலகத்துறையின் கூடுதல் பொறுப்பு வகித்து வரும் நிலையில், பொது நூலகத்துறையின் இணை இயக்குநர் பணியிடத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் சுவாமிநாதனுக்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post பள்ளிக் கல்வித்துறையில் 4 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Kumaraguruparan ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை