- திருச்சிராப்பள்ளி அரசு பள்ளி
- குலிதலை
- கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம்
- திருச்சாபூர் அரசு நடுநிலைப் பள்ளி
குளித்தலை, பிப்.6:கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் திருச்சாப்பூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை எம்எல்ஏ மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டு அதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் ரமணி தலைமை வகித்தார்.
கரூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, வேளாண்மைகுழு தலைவர்கள் ராஜேந்திரன்,தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் துரை அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்எல்ஏ மாணிக்கம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post குளித்தலை அருகே திருச்சாப்பூர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை appeared first on Dinakaran.