×

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசு தலைவருக்கு பின்னால் அணிவகுத்து வந்தோம் .10 ஆண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது அதையே குடியரசு தலைவர் உரை பிரதிபலிக்கிறது. “4 தூண்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும். இளைஞர், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 சக்திகளை பற்றி பேசவுள்ளோம். மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம்.

காங்கிரசுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. இளம் எம்பிக்களின் குரலையும் காங்கிரஸ் முடங்குகிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள். தேர்தலில் போட்டியில் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை ஆட்சிக்கு வரவும் வாய்ப்பில்லை.

எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்டநாள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பர் என எனக்கு தெளிவாகிறது. அவர்களும் மேலே வரவில்லை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சில நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை நாட்டை பிளவுப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்துங்கள். நாடாளுமன்றத்தில் இருக்கவே எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர். எதிர்க்கட்சிகளின் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.

நாடு எவ்வளவு குடும்ப அரசியலை பார்த்து உள்ளதோ அதில் பெரும் பங்கு காங்கிரஸை சாரும் . எதிர்கட்சிகளை திறம்பட வழிநடத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. இந்த அவையில் உள்ள பல உறுப்பினர்கள் அடைத்த முறை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உத்தேசத்து உள்ளனர்.

மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாறிவிட்டார். குலாம்நபி ஆசாத் கட்சியே மாறிவிட்டார். மக்களால் தேர்தெடுக்கப்பட்டு எம்பியாக ஆவதை நான் வரவேற்கிறேன். ஒரு குடும்பத்தின் அரசிய தபோது காணாமல் போய்விட்டது. மக்கள் நலதிட்டங்களை கொண்டுவந்தால் அதை ரத்து செய் என்கிறது காங்கிரஸ்.

நாங்கள் 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனும்போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் விரைவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவின் ஜிடிபி உலக பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். ஒன்றிய பாஜக அரசு பெரிய குறிக்கோள்களுடன் மிகவும் கடினமாக உழைக்கிறது. நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல; நாட்டின் சாதனையை பற்றி பேசுகிறோம்.

வந்தே பாரத், மேக் இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவை நாட்டின் சாதனைகள். 4.8 கோடி ஏழை மக்களுக்கு ஒன்றிய அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. நாங்கள் 70 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளை கொடுத்துள்ளோம். பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்ய 100 ஆண்டுகள் ஆகும். காங்கிரஸ் கொண்டுள்ள மனப்பான்மையால் நாட்டிற்கு பெரும் தீங்கு ஏற்படும். உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுவதை G20 மாநாடு மூலம் உலகத் தலைவர்கள் புரிந்து கொண்டனர்.

எங்களுக்கு தேசத்தின் திறமையின் மீது நம்பிக்கை உள்ளது மக்களின் சக்தியின் மீதும் நம்பிக்கை உள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து, நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தினோம். மகளிர் சக்தியை உணர்ந்து பாஜக திட்டங்களை வகுத்தது. தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

The post குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,President of the Republic ,Delhi ,President ,
× RELATED குற்றவியல் வழக்குகளில் இருந்து...