×

பட்டப்பகலில் கட்டிப்போட்டு வியாபாரி வீட்டில் கொள்ளை 5 பேர் அதிரடி கைது

கோவை: வியாபாரி வீட்டில் 36 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (52). மொத்த பருத்தி வியாபாரி. இவரது மனைவி ரூபல் (49). இவர் மகன் மிகர் (24). தரை தள வீட்டில் பருத்தி வியாபார அலுவலகமும், மேல் தளத்தில் குடியிருப்பும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கமலேஷ் மோடி மருதமலை கோயிலுக்கு சென்றுவிட்டார்.

அன்று மதியம் வீட்டிற்கு இரு கார்கள், ஒரு பைக்கில் 12 பேர் வந்தனர். அவர்கள் அலுவலகம் மற்றும் வீட்டுக்கு சென்று அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். வீட்டில் பீரோ, கட்டில் என பல்வேறு இடங்களில் தேடி, ரூபல் உள்ளிட்டவர்கள் அணிந்திருந்த 36 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்து 13 லட்ச ரூபாயை கொள்ளையடித்தனர். பின்னர் பணம் நகையுடன் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், வழக்கு பதிந்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (31), சூர்யா (27), பூபதி (31), ஜூலியட் (39), தமிழரசன் (32) ஆகிய 5 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 12 பேரை தேடி வருகின்றனர். கைதான நபர்களிடம் 3.5 லட்ச ரூபாய், 11.5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. கைதான நபர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நாங்கள் கோவை சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டபோது நண்பர்களாக மாறினோம். அப்போது கமலேஷ் வீட்டில் நகை, பணம் அதிகமாக இருப்பதாக கூட்டாளி ஒருவன் மூலம் தெரியவந்தது. நாங்கள் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் திட்டம் போட்டு கொள்ளையடித்ேதாம்.

காரில் தப்பி சென்றோம். அப்போது எங்களுடன் வந்த கூட்டாளி தாகமாக இருப்பதாக கூறி சரவணம்பட்டியில் காரை நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்தார். அங்கே இருந்த கேமராவில் எங்களின் காரின் பதிவு எண்ணும், கூட்டாளி முகமும் பதிவாகிவிட்டது. இதை வைத்து போலீசார் எங்களை தேடி பிடித்து விட்டார்கள். நாங்கள் முகத்தை மறைத்து திட்டமிட்டு கொள்ளையடித்தும் மாட்டி கொண்டோம்’’ என்று கூறியுள்ளனர்.

The post பட்டப்பகலில் கட்டிப்போட்டு வியாபாரி வீட்டில் கொள்ளை 5 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kamlesh Modi ,RS Puram West Arogyasamy Road, Coimbatore ,Rubel ,Dinakaran ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி