×

தகாத உறவு காதலியுடன் விஷம் குடித்த காதலனும் பலி

சேலம்: சேலத்தை அடுத்துள்ள நீர்முள்ளிக்குட்டை காமராஜர்காலனியை சேர்ந்தவர் சதாசிவம் மகள் முத்தமிழ் இளவரசி (20). இவர், தனது காதல் கணவரை பிரிந்து 2 வயது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அங்கு முத்தமிழ்இளவரசிக்கு அதேப்பகுதியை சேர்ந்த மனைவியை பிரிந்து வாழும் சக்திவேல் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 24ம் தேதி தனது 2 வயது ஆண் குழந்தையுடன் முத்தமிழ்இளவரசி வீட்டில் இருந்து மாயமானார். அதேநாளில் சக்திவேலும் மாயமானார். இதுபற்றி காரிப்பட்டி போலீசில் இருவரின் பெற்றோரும் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், மாயமான முத்தமிழ்இளவரசி, அவரது குழந்தையுடன் காதலன் சக்திவேலுடன் ஓடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால், தகாத உறவு காதல்ஜோடி மற்றும் 2 வயது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடினர்.இச்சூழலில் கடந்த 29ம் தேதி அதிகாலை நீர்முள்ளிக்குட்டை மாரியம்மன் கோயில் திடலுக்கு முத்தமிழ்இளவரசி தன் குழந்தையுடன் வந்தார்.

அவரை தாய் மங்கையர்கரசி மற்றும் உறவினர்கள் மீட்டனர். அப்போது, நானும், சக்திவேலும் விஷம் குடித்துவிட்டோம், எனக்கூறியுள்ளார். உடனே முத்தமிழ் இளவரசியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 1ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி முத்தமிழ் இளவரசி உயிரிழந்தார்.இதனிடையே காதலன் சக்திவேலை, அவரது உறவினர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்.

The post தகாத உறவு காதலியுடன் விஷம் குடித்த காதலனும் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Sathasivam ,Muthamith Ilaakshasi ,Neermullikuttay Kamarajar Colony ,Muthamil ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை