×

தஞ்சாவூரில் பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைதான இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைதான இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி தஞ்சையில் ஆஞ்சநேயர் கோயில் முன் அமர்ந்து 3 பேர் மது அருந்தியுள்ளனர். பெண் காவலர் ஆதிநாயகி அந்த பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு மது அருந்தியவர்களை தட்டி கேட்டு கோவில் பகுதி இங்கு மது அருந்த கூடாது கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். கலைந்து செல்ல மறுத்த அவர்கள் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் தகராறில் ஈடுபட்டிருந்த குபேந்திரன் உள்ளிட்ட மூன்று நபர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அதில் குபேந்திரன் என்பவர் அப்பகுதியில் இந்து முன்னணி பிரமுகரான பதவி வகித்து வருகிறார். 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற காவலர்கள் உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது நடவடிக்கை தகுந்தாற்போல் 3 பேரும் சிறையிலடைத்தனர். சிறையில் உள்ள 3 பேரும் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவில் இவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது மேலும் இந்து முன்னணி பிரமுகர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே 3 பேருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பு தெரிவித்து முன்னணி பிரமுகரான குபேந்திரனுடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைதான இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.

The post தஞ்சாவூரில் பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைதான இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Hindu Front ,Thanjavur ,High Court ,Anjaneyar temple ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...