×

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்து டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பணிகளுக்கு தடை விதிப்பது என்பது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களை பாதிக்கும் செயல் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஒரே ஒரு நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டர் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Supreme Court ,Delhi ,Madurai AIIMS Hospital ,Chief Justice ,Madurai AIIMS ,Dinakaran ,
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...