×

800 கிலோ எடை கொண்ட பாக்குகளை திருடியவர் கைது

கூடலூர் : கூடலூர் அருகே 2வது மைல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தின் மேலாளர் பால்ராஜ் என்பவர் தோட்டத்தில் நடைபெற்ற பாக்கு திருட்டு தொடர்பாக கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். உப்பட்டி அம்மன் காவு பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (45) என்பவரிடம் விசாரணை செய்த போது அவர் தோட்டத்தில் பாக்கு திருடியதை ஒப்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 800 கிலோ பாக்கு மற்றும் அதனை எடுத்து செல்ல பயன்படுத்திய பிக்கப் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஜெயப்பிரகாசை கைது செய்தனர்.

The post 800 கிலோ எடை கொண்ட பாக்குகளை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Balraj ,Kudalur police station ,Dinakaran ,
× RELATED கூடலூர்,பந்தலூர் வழியாக வரும்...