×

புதுக்கோட்டை அருகே டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பரிதாப பலி

பொன்னமராவதி : புதுக்கோட்டை அருகே டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு பிச்சங்களப்பட்டியை சேர்ந்த பெரியாண்டி மகன் லோகநாதன்(22). அரசு கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை லோகநாதன், பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்பட்டுக்கு விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டிச்சென்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து மணியாரங்குளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் லோகநாதன் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த பொன்னமராவதி சம்பவ இடத்திற்கு சென்று லோகநாதன் உடலை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Ponnamaravati ,Periyandi ,Lokanathan ,Warpattu Pichangalapatti ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...