×

புதுக்கோட்டை அருகே கார்-லோடு ஆட்டோ மோதி தம்பதி பலி

*திருவண்ணாமலைக்கு சென்றபோது பரிதாபம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே கார்-லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருவண்ணாமலைக்கு சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(60). இவரது மனைவி உமா மகேஸ்வரி(46). இவர்களது மகன் பிரவீன்சுந்தர் (22). இவர்கள் மூவரும், திருவண்ணாமலை செல்வதற்காக காரில் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டனர். காரை பிரவீன்சுந்தர் ஓட்டினார். அப்போது புதுக்கோட்டை சத்தியமங்கலம் அருகே நேற்று வந்தபோது எதிரே சத்தியமங்கலத்திலிருந்து வந்த மினிவேன் மீது கார் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவாகனங்களும் இடிபாடுகளில் சிக்கியது. அருகில் இருந்தோர், கடப்பாரை கொண்டு வாகனங்களை தனித்தனியாக பிரித்தெடுத்தனர். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் இருந்த மற்ற 2 பேர், மினிவேன் ஓட்டி வந்த கௌதம்கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் உமாமகேஸ்வரியை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதில் பிரவீன் சுந்தர், கௌதம்கார்த்திக் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகனுடன் காரில் திருவண்ணாமலைக்கு சுற்றுலா சென்ற தாய்-தந்தை‌ விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

The post புதுக்கோட்டை அருகே கார்-லோடு ஆட்டோ மோதி தம்பதி பலி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tiruvannamalai Pudukottai ,Tiruvannamalai ,Govindan ,RS ,Mangalam ,Ramanathapuram district ,Uma Maheshwari ,Praveen Sundar ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...