×

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் படம் அதர்சில் உள்ளது…

 

வேலூர், பிப்.5: ராணிப்பேட்டை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த கார் டிரைவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அவரக்கரை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் எஸ்.ருஷிராகோட்டி(42). கார் டிரைவர். இவர் கடந்த 3ம் தேதி மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு தனது பைக்கில் திரும்பி கொண்டிருந்த போது, மற்றொரு வாகனத்தின் மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உறவினர்களின் அனுமதியுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதில் இருதயமும், நுரையீரலும் சென்னை அப்போலோ, எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் வலது அப்போலோ குளோபல் மருத்துவமனைக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம், கண்ணின் கார்னியா சிஎம்சி வேலூர் மற்றும் ராணிப்பேட்டை வளாகத்துக்கும் தானமாக பெறப்பட்டது. உடல் உறுப்புகள் தானமாக வழங்கிய விபத்தில் இறந்த ருஷிராகோட்டியின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டாராம். இவருக்கு 18 வயதில் பிளஸ்2 படித்து தற்போது குடும்பத்தை கவனிக்கும் ஹேமாவதி, 9ம் வகுப்பு படிக்கும் மோனிஷா, மனீஷா என மூன்று மகள்களும், 8ம் வகுப்பு படிக்கும் மணி என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் படம் அதர்சில் உள்ளது… appeared first on Dinakaran.

Tags : Ranipettai Vellore ,Ranipet ,S. Rushirakotty ,Avakarai Pilliyar Koil Street, Ranipet, Ranipet district ,Ranipettai ,Adarsh ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...