×

தினமும் மாலையில் புதுக்கோட்டை படியுங்கள் ஒன்றிய அரசு உடனடியாக 16வது தவணை கவுரவத்தொகையை விடுவிக்க வேண்டும்

 

கந்தர்வகோட்டை: ஒன்றிய அரசு உடனடியாக 16வது கவுரவத்தொகையை விடுவிக்க வேண்டும் என கந்தர்வகோட்டை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் தற்சமயம் கரும்புவெட்டுதல் ,உளுந்து பயிர் சேகரித்தல், கடலை பயிருக்கு களை வெட்டுதல் போன்ற விவசாய பணி செய்து வருகின்றனர். மேலும் சம்பா நெல் அறுவடையும் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு பணப்புழக்கம் பற்றாக்குறை உள்ளது.

ஒன்றிய அரசு வழங்கும் விவசாய கவுரவத்தொகை 16வது தவணையை உடனே வழங்கினால் அதைக்கொண்டு விவசாய பயிருக்கு உரம் போடவும், மருந்து தெளிக்கவும், களை வெட்டவும் இதர விவசாய செலவுக்கு ஆகும் என கூறுகிறார்கள். இதனால் ஒன்றிய அரசு விவசாயிகள் மீது அக்கறை கொண்டு உடனடியாக விவசாய கவுரவ தொகையை உடனடியாக அவரவர் வங்கி கணக்குக்கு விடுவிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தினமும் மாலையில் புதுக்கோட்டை படியுங்கள் ஒன்றிய அரசு உடனடியாக 16வது தவணை கவுரவத்தொகையை விடுவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Union Government ,Gandharvakot ,Kandarvakottai ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...