×

இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்

 

பெரம்பலூர்,பிப்.5: இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று துறை மங்கலத்தில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்துல் நாசர், செயலாளர் பைசல் நிசார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் ஃபாருக், மாநில தணிக்கை குழு தலைவர் அப்துர் ரஹீம், மாநிலச் செயலாளர் அல்அமீன், மாநில பேச்சாளர் சுலைமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த பயிற்சி முகாமில் பாபர் மசூதியை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியைக் குறிவைத்து தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் வழி பாட்டுத் தல பாதுகாப்பு சட்டத்திற்கும் எதிரான முறையில் பள்ளிவாசல் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு, வரு கிற 10ம்தேதி பெரம்பலூரில் அமைதிப்பேரணி நடத்துவது, பாராளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டுவது. இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும், இஸ்ரேலின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டும், நீண்டகால முஸ்லிம் சிறை வாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tawheed Jamaat ,Sector Mangalam ,District ,President ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை