×

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல் முறையாக குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து பயணியர் நிழற்குடை: எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

காஞ்சிபுரம், பிப்.5: காஞ்சிபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்முறையாக குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார். கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே குளிரூட்டப்பட்ட பேருந்து நிழற்குடை அமைக்க காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு ரூ.18 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டுமான பணிகளை காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயில் உள்ள புதிய பேருந்து நிழற்குடையை, கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி குளிரூட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை நேற்று காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் ரிப்பன் வெட்டி துவக்கி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த புதிய பேருந்து நிழற்குடையில் பயணியர்கள் வசதிக்காக இரண்டு குளிரூட்டப்பட்டும் இயந்திரமும், பயணியர்கள் ஓய்வெடுத்து அமரக்கூடிய இருக்கை, மின் விசிறி, பயணியர்கள் வசதிக்காக ஏடிஎம் இயந்திரம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கூடிய முன்மாதிரியான பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, ஆணையர் செந்தில், பொறியாளர் கணேஷ் மற்றும் மண்டல தலைவர்கள் சந்துரு, சசிகலா கணேஷ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர், திலகர், தசரதன், வெங்கடேசன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், கமலக்கண்ணன், சரவணன், உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

The post கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல் முறையாக குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து பயணியர் நிழற்குடை: எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Karunanidhi Centenary ,Ezhilarasan ,Kanchipuram ,Kanchipuram, MLA ,Ehilarasan ,Kanchipuram District Collector ,Ehilarasan MLA ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...