×

கருத்தரங்கில் தகவல் மொபட் தீ பிடித்து எரிந்து கருகியது

 

கொள்ளிடம்,பிப்.5: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(48). பால் வியாபாரி. இவர் வீடு வீடாக சென்று பால் வாங்கி டீக்கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று பால் விற்பனை செய்தும் வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் மாதானம் கிராமத்திலிருந்து திருமுல்லை வாசலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கடவாசல் முனீஸ்வரன் கோயில் அருகே சாலையோரம் இவருக்கு சொந்தமான டிவிஎஸ் சூப்பர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள வயல் பகுதிக்கு சென்றார். வயலிலிருந்து சற்று நேரம் கழித்து சாலையை திரும்பி பார்த்தபோது சாலையில் புகை மட்டும் காணப்பட்டது.

உடனே அவர் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி வைத்திருந்த (மொபட்) டிவிஎஸ்-50 தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே இது குறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கருத்தரங்கில் தகவல் மொபட் தீ பிடித்து எரிந்து கருகியது appeared first on Dinakaran.

Tags : Kollidum ,Senthilkumar ,Kadavasal ,Kollidum, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது