×

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளி கைது

 

ஊத்தங்கரை, பிப்.5: ஊத்தங்கரையில், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரத் (எ) வேடியப்பன்(35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி(22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம், சுமதி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில், ஊத்தங்கரை போலீசார்அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று காலை, அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்த சுமதியின் உறவினர்கள், கணவர் வீட்டார் கொடுமை செய்ததால்தான், சுமதி தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, மருத்துவமனை முன்பு கிருஷ்ணகிரி தேசிய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சுமதியின் கணவர் வேடியப்பனை, தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை காரணமா? என ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகிறார்.

The post மனைவியை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Laborer ,Uthangarai ,Sarath ,Upparapatti ,Oodhangara, Krishnagiri district ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு