×

தோகைமலை கிளை நூலகத்தில் மாணவர்களை புரவலர்களாக இணைப்பு

 

தோகைமலை, பிப்.5: தோகைமலையில் உள்ள கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புரவலர்களாக இணைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலையில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. தோகைமலை கிளை நூலகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் நூலகத்தின் பயன்பாடுகளை எடுத்துரைத்து நூலக உறுப்பினர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஊர்புற நூலகர் கண்ணதாசன், நூலக வளர்ச்சிக்காக புரவலர்களை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் புரவலராக இணைக்கும் நிகழ்ச்சியில் கண்ணதாசன் கலந்து கொண்டு பேசும்போது: தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களில் புரவலர்கள், பெரும் புரவலர் மற்றும் நன்கொடையாளர்களாக இணைவதற்கு ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் நூலங்களின் வளர்ச்சி பின்னடைந்து வருகிறது. தற்போது நூலங்களை வளர்ச்சி பெறச்செய்வதற்காக, புத்தக கண்காட்சிகள், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறன்களை மேம்படுத்துவது, அனைத்து நூல்களையும் வழங்குவது உள்பட பல்வேறு பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நூலகங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நூல புரவலர்களை இணைப்பதற்கு விழிப்பபுணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம் என்று பேசினார்.

The post தோகைமலை கிளை நூலகத்தில் மாணவர்களை புரவலர்களாக இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Thokaimalai Branch Library ,Thokaimalai ,Library ,Tokaimalai ,Karur ,Tokaimalai branch ,branch ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...