×

அமித்ஷாவுடன் பேசியது என்ன? புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி

சென்னை: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், நேற்றுமுன்தினம் டெல்லி சென்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு, நேற்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி: நான் டெல்லி சென்றதும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதும் ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்புதான்.

புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டம் பற்றி தான் உள்துறை அமைச்சரிடம் ஆலோசித்தேன், புதுச்சேரி மாநில சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தினேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை, நான் முழு மனதுடன் வரவேற்று, அவரை வாழ்த்துகிறேன்.

The post அமித்ஷாவுடன் பேசியது என்ன? புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Puducherry ,Governor Tamilisai ,CHENNAI ,Puducherry Governor Tamilisai Soundarrajan ,Delhi ,Union Home Minister ,Air India ,Chennai airport ,Puducherry Governor Tamilisai ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...