×

பிஏசிஎல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணிவெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி மக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, ரூ.60 ஆயிரம் கோடியை வசூலித்து ஏமாற்றிய பி.ஏ.சி.எல் நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மீட்டுத் தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 8 ஆண்டுகள் ஆகிறது.

ஒன்றிய, மாநில அரசுகளின் சட்ட செயலாக்க அமைப்புகள் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட்டால் தான் பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திரும்பத் தர முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டின் 1 கோடி குடும்பங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 6 கோடி குடும்பங்களின் பணத்தை மீட்டுத்தந்து அவர்களை காப்பாற்ற வேண்டும்.

The post பிஏசிஎல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,Paramaka ,President ,India ,Supreme Court ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...