×

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

கோவை: தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டுவை சஸ்பெண்ட் செய்து கோவை எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (58). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் மொபட்டில் சென்றபோது அவரிடம் பைக்கில் வந்த நபர் நகை பறித்தார். கோலார்பட்டியை சேர்ந்த அம்சவேணி (32) என்பவரிடமும் பிஏபி அலுவலகம் அருகே நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், நகை பறிப்பில் ஈடுபட்டது பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரிகிரி (41) என்பதும் அவர் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஏழரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பல இடங்களில் நடைபெற்ற நகைப்பறிப்பில் இவருக்கு தொடர்பு உள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினார். இவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் நேற்று உத்தரவிட்டார். சபரிகிரியின் மனைவியும் வால்பாறையில் போலீசாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore SP ,Maheshwari ,Makinambatti, Pollachi ,
× RELATED வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம்