×

பொதுமக்கள் கோரிக்கை எஸ்எஸ்ஐ உள்பட 5 பேர் சஸ்பெண்ட் மாநகர காவல் ஆணையர் அதிரடி

 

திருச்சி, பிப்.4: திருச்சியில் எஸ்எஸ்ஐ உள்பட 5 பேரை மாநகர காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாநகர் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிறப்பு எஸ்ஐ குமார் மற்றும் அவருடன் பணியாற்றிய ஏட்டுகள் சங்கராந்தி, ராஜேஷ்குமார், குமார், தங்கராஜ் உள்பட 5 பேரும் சில தினங்களுக்கு முன்பு மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். லாட்டரி விற்பனையை தடுக்கத் தவறியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் திருச்சி மாநகர காவல்ஆணையர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post பொதுமக்கள் கோரிக்கை எஸ்எஸ்ஐ உள்பட 5 பேர் சஸ்பெண்ட் மாநகர காவல் ஆணையர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : SSI ,Trichy ,Municipal Police Commissioner ,Kumar ,Gandhimarket Police Station ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...