×

55வது நினைவுதினம் பேரறிஞர் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிப்பு

 

தஞ்சாவூர், பிப்.4: பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலமாக வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமையில் எஸ் எஸ் பழனி மாணிக்கம் எம்பி, தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், மாநில மருத்துவர் துணை செயலாளரும், துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவல்லி பாலாஜி, மத்திய மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திக மாவட்ட தலைவர் அமர்சிங், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில் வேந்தன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் மற்றும் பலர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.

The post 55வது நினைவுதினம் பேரறிஞர் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Commemoration Day ,DMK ,Perarirjanar Anna ,Thanjavur ,Perarinjar Anna ,Thanjavur Central District ,Guru Anna ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்