×

தாழைநகரில் பகுதி நேர நியாயவிலைக்கடை

 

பெரம்பலூர்,பிப்.4:பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பாக, வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை ஊராட்சிக்கு உட்பட்ட தாழைநகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை கட்டிடத் திறப்புவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பாஸ்கர், பெரம்பலூர் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் இளஞ்செல்வி, கூட்டுறவு சார் பதிவாளர் பொன்னர், அரும்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு, பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரெங்கராஜ், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் (மேற்கு) நல்லதம்பி, ஒன்றிய அவைத்தலைவர் அம்பேத்கர், அரும்பாவூர் பேரூராட்சித் தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சரண்யாகுமரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தாழைநகரில் பகுதி நேர நியாயவிலைக்கடை appeared first on Dinakaran.

Tags : Thalanagar ,Perambalur ,Perambalur District Cooperative Department ,Thaluthala Panchayat ,Veppanthatta Taluka ,Perambalur District Panchayat ,Councilor ,Bhaskar ,Perambalur Public Distribution Scheme ,Deputy Secretary ,Ilanjelvi ,time Fair Market ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை