×

முத்தையாபுரத்தில் தொழிலாளி திடீர் சாவு

ஸ்பிக்நகர், பிப்.4: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரத்தில் வெல்டிங் தொழிலாளி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் வேலாயுத நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் பூபதி (41). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் நடந்த கோயில் கொடை விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினார். பின்னர் நள்ளிரவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் பதறிய அவரது மனைவி பேச்சியம்மாள் பூபதியை ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பூபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post முத்தையாபுரத்தில் தொழிலாளி திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram ,Spignagar ,Thoothukudi ,Bhupathi ,Isakimuthu ,Velayuda Nagar ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...