- கிருஷ்ணராயபுரம்
- சங்கரன்மலைப்பட்டி
- கோபால் மகன்
- லந்தகோட்டை
- குஜிலியம்பாறை தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம்
- தின மலர்
கிருஷ்ணராயபுரம், பிப்.4: கிருஷ்ணராயபுரம் அருகே சங்கரன்மலைப்பட்டியில் மினி சரக்கு வேன் திடீரென ஓட்டுனர் கட்டுப்பட்ட இழந்து கீழே சாய்ந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதில்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் முருகேசன் என்பவர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரியாற்றுக்கு செல்ல ஓட்டி வந்த மினி சரக்கு வேன் கிருஷ்ணராயபுரம் அருகே சங்கரன்மலைப்பட்டி பகுதியில் திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மினிசரக்கு வேனில் வந்த திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் காளியம்மாள் (65), முருகேசன் (50), ராஜேஸ்வரி (45), மணவாளன் (21), கோகுல் (21), நாகப்பன் (70), சசிகலா (35), மணிமாறன் (44), கரூர் மாவட்டம் ஜல்லிப்பட்டி பகுதியை சேர்ந்த பிச்சையம்மாள் (65) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கிருஷ்ணராயபுரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.