×

வாலிபர்களை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, பிப். 4: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி அரசமரத்தெருவைச் சேர்ந்தவர் நேரு மகன் தங்கப்பாண்டி(27). இவர் தனது நண்பர்கள் பால்பாண்டி, கவியரசன், முத்துக்குமார் ஆகியோருடன் காமக்காபட்டி தண்ணீர்தொட்டி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கெங்குவார்பட்டி ராமர்கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துக்குமார் என்ற செஞ்சி, கணேசன் மகன் சதீஸ், தாசில்ராஜா மகன் சதீஸ், கணேசன் மகன் பாரதி ஆகிய 4 பேரும் சாலையோரத்தில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். இவர்கள் சாலையில் நடந்து சென்ற தங்கப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறு செய்து அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் தங்கப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் முத்துக்குமார் என்ற செஞ்சி, சதீஸ், பாரதி, சதீஸ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபர்களை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Thangapandi ,G. ,Kallupatti Arasamaratheru ,Kamakapatti ,Balpandi ,Kaviarasan ,Muthukumar ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை