×

ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேயர் ஆய்வு

திருப்பூர், பிப்.4: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தரமாக பணிகள் மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை மேயர் தினேஷ்குமார் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மேயர் தினேஷ்குமார் மாநகரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Smart City ,Tirupur Municipal Corporation ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை