×

கல்லூரி மாணவியை கடத்திய மாணவர் போக்சோவில் கைது வேட்டவலம் அருகே

வேட்டவலம், பிப்.4: வேட்டவலம் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக மாணவர் போக்சோவில் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பஸ்சில் கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து அவரது தந்தை வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு பெய்த போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர்.

விசாரணையில், மாணவியை செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கடத்திச் சென்று திருப்பூரில் தங்க வைத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் கல்லூரி மாணவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர் மாணவியை கடத்திய குற்றத்திற்காக கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கல்லூரி மாணவரும் மைனர் என்பதால் அவரை கடலூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் மாணவியும் மைனர் என்பதால் அவரை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post கல்லூரி மாணவியை கடத்திய மாணவர் போக்சோவில் கைது வேட்டவலம் அருகே appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Pokso ,Pocsoville ,Tiruvannamalai district ,
× RELATED பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில்...