ஊட்டி, பிப்.4: ஊட்டி படகு இல்லம் சாலையில் விபத்தை தவிர்க்க முயற்சித்த போது நடைபாதையில் மோதி லாரி விபத்துக்குள்ளானது. ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் இருந்து லாரி ஒன்று காந்தல் ேநாக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு வளைவில் சுற்றுலா பயணிகள் வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. மேலும், அந்த வாகனம் லாரியை நோக்கி வந்த நிலையில், விபத்தை தவிர்ப்பதற்காக இடது புறமாக ஓட்டுநர் லாரியை திருப்பியுள்ளார். போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி படகு இல்லம் நடைபாதை மீது மோதி நின்றது. எப்போதும், இந்த நடைபாதையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வது வழக்கம். ஆனால், லாரி விபத்துக்குள்ளான போது, அந்த நடைபாதையில் யாரும் செல்லாத நிலையில் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், லாரி சிறிது தூரம் சென்றிருந்தால், ஏரிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கும். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
The post ஊட்டி படகு இல்லம் சாலை நடைபாதையில் மோதி விபத்துக்குள்ளான லாரி appeared first on Dinakaran.