×

காப்பகத்தில் இருந்த 2 சிறுவர்கள் மாயம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே காப்பகத்தில் தங்கி இருந்த 2 சிறுவர்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகத்தில் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி இருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த விஷ்வா (16), தினேஷ் (16) என்ற இரண்டு சிறுவர்கள் நேற்று காலை வழக்கம் போல் காப்பகத்தில் இருந்து வெளியில் சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. இதுகுறித்து காப்பகத்தை நடத்தி வரும் பால் விஜயகுமார் என்பவர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post காப்பகத்தில் இருந்த 2 சிறுவர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Maduraandakam ,Mambakkam ,Madurandakam ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அகற்றம்