×

பள்ளி மாணவனை கடித்த விஷ பூச்சி

ஆவடி: ஆவடி அருகே அரசுப் பள்ளி மாணவனை விஷ பூச்சி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி அடுத்த திருநின்றவூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகுந்தன்(38). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தருண்(13), திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தருண் தனது நண்பர்களுடன் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது புதர்கள் உள்ளே இருந்து ஏதோ விஷ பூச்சி தருணின் இடது காலில் கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக மாணவர்கள் உடனடியாக பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்து, அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பள்ளி மாணவனை கடித்த விஷ பூச்சி appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Mukundan ,Thiruninnavur Perumal Koil Street ,Avadi ,Tarun ,Gomathipuram ,Thiruninnavur ,
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...