×

மனைவி காணாமல் போன துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் தீபக்குமார்(35). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜெகதீஸ்வரி(30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தீபக்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு சென்ற ஜெகதீஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அம்மா வீட்டிற்கும் போகாததால் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு சென்ற மனைவியை வீடு திரும்பாததால் மன உளைச்சலில் இருந்த தீபக்குமார் 1ம் தேதி மாலை தீபக் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீபக்குமாரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தீபக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி காணாமல் போன துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Deepakumar ,Munuswamy ,Ekkadu ,Jagatheeswari ,Deepak Kumar ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...