×

மனைவி தாய் வீடு சென்றதால் கணவன் தற்கொலை

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பாலாஜி(42). இவரது மனைவி ராணி(38). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை மீண்டும், கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனைவி, தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி வீட்டில் தூக்கிட்டுக் கொண்டார். அப்பகுதி மக்கள் பாலாஜியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி தாய் வீடு சென்றதால் கணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Shanmugam ,Balaji ,Nallatur Colony ,Tiruvalangadu Union ,Rani ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...