- கேரளா
- தமிழ்நாடு அரசு
- மார்த்தாண்டம்
- கேரள அரசு
- நாகர்கோவில்
- திருவனந்தபுரம்
- அனீஸ் கிருஷ்ணா
- கருநாகப்பள்ளி, கொல்லம் மாவட்டம்
- கோபாலகிருஷ்ணன்
- நெய்யாற்றங்கரை
மார்த்தாண்டம்: நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த அனீஸ் கிருஷ்ணா (45) என்பவர் ஓட்டிச்சென்றார். நெய்யாற்றங்கரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கண்டக்டராக இருந்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பஸ் வந்தபோது முன்னால் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இரு பஸ்களின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில், கேரள பஸ் டிரைவர் அனீஸ் கிருஷ்ணா, தமிழ்நாடு பஸ் டிரைவர் திருத்துவபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (50), தமிழக பஸ் கண்டக்டர் சந்தோஷ் உள்ளிட்ட கேரள மற்றும் தமிழக பயணிகள் என 40 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதில், குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளா பஸ் டிரைவர் அனீஸ் கிருஷ்ணா சிகிச்சை பலனி அளிக்காமல் உயிரிழந்தார்.
The post மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கேரள – தமிழக அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி: 40 பேர் காயம் appeared first on Dinakaran.