×

தமிழக விளையாட்டு பட்டியலில் ஜல்லிக்கட்டை சேர்க்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி: தமிழக விளையாட்டு பட்டியலில் ஜல்லிக்கட்டு போட்டியை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ஐசிஆர்எஸ் என்பது விளையாட்டு தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம். இது, திருச்சி தேசியக் கல்லூரியில் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. இதில், அமெரிக்கா, ஐரோப்பியா, உக்ரைன் உள்ளிட்ட 50 நாடுகளில் விளையாட்டு துறை சார்ந்த பலர் கலந்துகொள்கின்றனர். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக்க முயற்சி எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளையாட்டு பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகுதான் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும். கட்சி துவங்குவது என்பது அவரவர் விருப்பம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போன்றே நானும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தமிழக விளையாட்டு பட்டியலில் ஜல்லிக்கட்டை சேர்க்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Tamil Nadu ,Minister Anbil Mahesh ,Trichy ,Minister for School Education ,Anbil Mahesh Poiyamozhi ,School Education ,Minister ,Anbil Mahesh ,ICRS ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்