×

எடப்பாடி ஒரு டம்மி பொதுச்செயலாளர்: ஓபிஎஸ் ஆவேசம்

கள்ளக்குறிச்சி: எடப்பாடி பழனிசாமி ஒரு டம்மி பொதுச்செயாலாளர் என்று ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: மக்களால் மறக்க முடியாத முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா 30 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று மற்ற கட்சிகளை எதிர்த்து பாதுகாத்து இந்த இயக்கத்தை வளர்த்தார். இந்த இயக்கம் நல்ல முறையில் பயணிக்க வேண்டி சட்ட விதிகளை ஜெயலலிதா இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தார். சட்ட விதிகளை மாற்றவோ திருத்தவோ கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

அப்படிப்பட்ட விதியை ரத்து செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது என எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட சட்டம் அது. அப்படிப்பட்ட விதியை காலில் போட்டு மிதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான். டம்மி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். சர்வாதிகாரத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமை என கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. பணபலத்தை கொண்டு அவர் தான், தான் பொது செயலாளர் என பேசிக்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பாஜ உடன் கூட்டணியில் இருக்கிறோம். பிரதமர் மோடியுடன் கூட்டணி தொடரும். கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்,’என்றார்.

 

The post எடப்பாடி ஒரு டம்மி பொதுச்செயலாளர்: ஓபிஎஸ் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,OPS ,Kallakurichi ,O. Panneer Selvam ,Edappadi Palaniswami ,AIADMK ,recovery committee ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்