×

மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் சிறப்பு பயிலரங்கம்: 13ம் தேதி நடக்கிறது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மதிமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, ஆபத்து உதவிகள் அணி, இணையதள அணி மாநில செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எழும்பூர் தாயகத்தில் நேற்று நடந்தது. தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி தலைமை வகித்தார். இளைஞர் அணிச் செயலாளர் ஆசைத்தம்பி, மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ், பொறியாளர் அணிச் செயலாளர் க.ஹேமநாதன், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் ராசேந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவதற்கு மதிமுகவின் இளைய படை பிரிவுகளின் முன்னணி தளகர்த்தகர்கள், தீவிர செயல்பாட்டாளர்கள் அடங்கிய மதிமுக இளையோர் தேர்தல் சிறப்பு பயிலங்கத்தை வரும் 13ம்தேதி எழும்பூர், சிராஜ் மகாலில் கூட்டுவது, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவை பேச அழைப்பது, அனைத்து அணிகளும் ஒருங்கிணைந்து செயலாற்றுவது, கூட்டத்துக்கு 2000 பேரை அழைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் சிறப்பு பயிலரங்கம்: 13ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : MDMK ,CHENNAI ,Madhyamik ,Egmore Motherland ,election ,Dinakaran ,
× RELATED மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள்