×

பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்,

அதிமுக கூட்டணி பேச்சு – ஜெயக்குமார் மழுப்பல்

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதில் அளித்துள்ளார். எந்தெந்த கட்சிகளுடன் அதிமுக பேசி வருகிறது என்பதை வெளிப்படையாக கூற முடியாது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடைசி நேர திருப்பத்துக்காக காத்திருக்கும் அதிமுக:

அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு தனியாக ஆலோசனை நடத்தியது தொடர்பான கேள்விக்கு ஜெயக்குமார் மழுப்பலான பதில் அளித்தார். தேர்தல் கூட்டணி அமைப்பதில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தை – பின்தங்கிய அதிமுக

அதிமுக தொகுதிப் பங்கீடு குழு அமைத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்தக் கட்சிகளுடனும் அந்தக் குழு பேச்சு நடத்தவில்லை. அண்மையில் அதிமுக அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டுக் குழு ஆலோசனை நடந்தபோதும் வேறு எந்தக் கட்சியை சேர்ந்தவர்களும் வரவில்லை. நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்தபோதும் கூட்டணி குறித்து பேசவில்லை என செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பாஜக எங்களின் எதிரி – ஜெயக்குமார்

இதற்கு முன் தோழமையாக இருந்தாலும் இப்போது பாஜக எங்களுக்கு எதிரி என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம் எனவும் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் தெரிவித்தார்.

The post பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,minister ,Jayakumar ,Adamuka ,Chennai ,Former ,ADAMUKA KOTTANI ,JAYAKUMAR MAGHUPAL ,ATEMUKA COALITION ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…