×

விசாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அடித்துக் கொலை: நில மாபியா கும்பலுக்கு தொடர்பா? என போலீசார் விசாரணை

ஆந்திரா: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமணய்யா இவர் வட ஆந்திராவில் உள்ள பத்மநாபம், பத்ரகொத்தூர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். இறுதியாக விசாகப்பட்டினம் மண்டலத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த அவர் ஆந்திராவில் விரைவில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு விசாகப்பட்டினத்தில் பணிபுரிந்து வந்த ரமணய்யாவை விஜயநகரம் மாவட்டம் பத்துப்பள்ளியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வழக்கம் போல தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் இரவு விசாகப்பட்டினத்தில் உள்ள கொம்மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருக்கக்கூடிய 5வது மாடி குடியிருப்பிற்கு வந்தார். இரவு 10 மணி அளவில் மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தனர்.

தொலைபேசியில் பேசிக்கொண்ட படியே வீட்டின் தரைதளத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபரிடம் அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியில் தெரியவந்தது. மேலும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அவருடன் வந்த 3 பேர் இரும்பு ராடல் தாசில்தாரை பலத்த தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே தாசில்தார் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த வாட்ச்மன் ரமணய்யா குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக ரமனையாவை விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு ரமணய்யா உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அறிந்த விசாகபட்டினம் காவல் ஆணையர் ரவி ஷங்கர் அய்யனார் தலைமையில் போலீசார் மற்றும் மோப்பநாய் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு தடவியல் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தாசில்தாரை கொலை செய்தது யார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நில அபகரிப்பு மாபியா கும்பலை சேந்தவர்களுக்கும் தாசில்தாருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விசாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அடித்துக் கொலை: நில மாபியா கும்பலுக்கு தொடர்பா? என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam ,Andhra ,Srikakulam district ,Andhra Pradesh ,Ramanaiya ,Padmanapam ,Badrakotur ,North Andhra ,Andhra Pradesh Assembly ,Parliament ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...