- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
- நெல்லை
- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா தொடங்கியது.பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கி வருகிறார். தங்கம் வென்ற 108 மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 பேருக்கு ஆளுநர் பட்டம் வழங்குகிறார்.சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்பப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் நனினா வியாஸ் பங்கேற்றுள்ளனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை.அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவை புறக்கணித்தார்.
The post மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா : ஆளுநர் பங்கேற்பு, அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.