×

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுதுறையில் இருந்து ராமன், பொன்னுதுரைக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற 5 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்-நடத்தி உள்ளனர். மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

The post நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Pirates ,Raman ,Ponnudurai ,Arukatuthurai ,Kodiakarai ,Dinakaran ,
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...