×

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி போளூர் அருகே சாலையோரம் நின்ற

போளூர், பிப்.3: போளூர் அடுத்த கொழாவூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்(20). இவர் தனது தந்தைக்கு தச்சு வேலை செய்வதில் உதவியாக இருந்து வருகிறார். இவரது நண்பர் மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த்(30). இந்நிலையில் புருஷோத்தமன், விஜயகாந்திற்கு சொந்தமாக பைக்கில் நேற்று முன்தினம் இருவரும் தேவிகாபுரம் சென்று விட்டு மீண்டும் கொழாவூர் திரும்பினர். விஜயகாந்த் பைக் ஓட்ட புருஷோத்தமன் பின்னால் அமர்ந்து வந்தார். மட்டப்பிறையூர் கூட்ரோடு அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே கரும்பு லாரி மீது லேசாக உரசி நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்றிருந்த டாராஸ் லாரியின் பின் பகுதியில் வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். புருஷோத்தமன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் விரைந்து சம்பவம் இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த புருஷோத்தமன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து புருஷோத்தமன் தந்தை ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி போளூர் அருகே சாலையோரம் நின்ற appeared first on Dinakaran.

Tags : Bali Bolur ,Polur ,Purushothaman ,Kolur village ,Vijayakanth ,Mandakolathur village ,Purushottaman ,Pali Bolur ,Dinakaran ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...