×

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை போளூர் அருகே

போளூர், பிப்.3: போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(27), இவரது மனைவி பேபிஷாலினி(19). இவர்களது திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கண்ணன் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனது மாமியார் சங்கீதாவுடன் அடிக்கடி கோபித்து கொண்டு வெள்ளுர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கி வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அதுபோல் தாய் வீட்டிற்கு சென்று விட்டு கடந்த 31ம்தேதி மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம்தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத போது பேபிஷாலினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த இளம்பெண்ணின் தாயார் சங்கீதா போளூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆவதால் இச்சம்பவம் குறித்து ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

The post இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை போளூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Bolur ,Polur ,Kannan ,Babyshalini ,Belasur ,Chennai ,Sangeeta ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...